தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்! புத்தாடைகள் அணிந்து தை 1ஐ வரவேற்ற தமிழர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளை தமிழர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா, தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாளாக திகழ்ந்து வருகிறது. இது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட விவசாய திருநாளாவும் கொண்டாடப்படுகிறது.

Pongal festival is celebrated all over Tamil Nadu

சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக பொங்கல் நன்னாள் பார்க்கப்படுகிறது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகள் என்றால் குறிப்பிட்ட மதத்தினர் அவரவர் பண்டிகைகள் கொண்டாடுவார்கள். ஆனால் தை முதல் நாளான பொங்கல் பண்டிகையை மட்டும் தான் சாதி, மத வேறுபாடின்றி தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.

Pongal festival is celebrated all over Tamil Nadu

மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாகத் தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மக்கள் புத்தாடைகள் அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து தை 1ஐ உற்சாகமாக வரவேற்றிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+