பொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்
சென்னை: வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்கு முன்னதாக பொங்கல் பரிசு மக்கள் கைக்கு கிடைத்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போல் வரும் ஆண்டிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்புதுண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு குடும்ப அட்டை தாரர்களுக்கு வரும் ஆண்டும் வழங்கப்பட உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு வழங்கப்படும் அறிவிப்பினை கடந்த மாதம் 29ம் தேதி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழாவில் அறிவித்தார்.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கொள்முதல்
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடி ரேசன் கார்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிப்பதற்காக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து வந்தது.

செவ்வாய் நிறைவு
இவற்றை கொள்முதல் செய்யும் பணி முடிந்து விட்ட நிலையில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக பாக்கெட் போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் செவ்வாய்கிழமை முடியும் என்று சொல்கிறார்கள்.

கூட்டுறவு வங்கி
இதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000-த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயாராக உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பினை வருகிற புதன்கிழமை இருந்து ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறதாம்.

பொங்கல் பரிசு
அதன்பிறகு பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 20-ந்தேதி வழங்க அரசு உத்தரவிட வாய்ப்பு உள்ளதாம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

தடை இல்லை
எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம்- பொருள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரேஷன் கடைகளில் எழுதி ஒட்டி வைக்கப்பட உள்ளதாம். இதன் மூலம் கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் வாங்கி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாம். ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டமாக நடக்க உள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

உங்கள் கையில் ஆயிரம்
ஏனெனில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக ஏற்கனவே இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துவிட்டதால் தடைகள் இல்லை என மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தேர்தலுக்கு முன்பே கைக்கு கட்டாயம் வர வாய்ப்பு உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications