பொங்கல் தொடர் விடுமுறை.. ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க.. களமிறங்கும் 30 டீம்!
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால், அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, 30 சிறப்பு குழுக்களை அமைத்து உள்ளது தமிழக அரசின் போக்குவரத்து ஆணையரகம்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர். பொங்கல் விடுமுறையோடு சேர்த்து வரும் ஜனவரி 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் ஜனவரி 14 முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் சென்று வருவது வழக்கம். பொங்கல் விடுமுறையை ஒட்டி அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அரசின் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஒரே நாளில் பல லட்சக்கணக்கானோர் பயணம் செய்வதால், ரயில், அரசு பேருந்துகள் போன்றவை போதாத நிலைதான் உள்ளது. எனவே ஏராளமானோர் ஆம்னி பேருந்த்களிலும் பயணம் செய்கின்றனர். எனினும் ஆம்னி பேருந்துகள் சில கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம், சிறை வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஆம்னி பஸ்கள் இயக்கம் அதிகமாக இருக்கும். எனவே, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.
இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுதும், 30க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பார்கள். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும்.
இந்தக் குழுவினர், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, பர்மிட் சஸ்பெண்ட், பேருந்து சிறை வைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications