பொன்முடி மட்டுமல்ல.. இன்னும் பலர் வரிசையா வருவாங்க.. அண்ணாமலை போட்ட லிஸ்ட்
சென்னை: பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை திமுகவை புரட்டிப்போடும் என்று கூறியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் பலர் இந்த லிஸ்டில் இருப்பதாக கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையோடு 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இது ஆரம்பம்தான் இன்னும் நிறைய பேருக்கு ஊழல் வழக்கில் தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.
அமைச்சர் ஒருவர் இலாகா இல்லாத அமைச்சராக நீண்ட நாட்களாக புழல் சிறையில் இருக்கிறார். இந்தியாவே பார்த்துக்கொண்டிருக்கிறது. தற்போது மூத்த அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பொன்முடி நீண்ட காலமாக திமுகவில் பதவியில் இருக்கிறார். அவர் இப்போது குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் வருகிறார்கள். இது ஆரம்பம்தான் என்று கூறியுள்ள அண்ணாமலை 2024ஆம் ஆண்டு மத்தியில் இன்னும் சில அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.
அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அது திமுகவை பாதிக்கும். இது தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமான தண்டனை மட்டுமல்ல என்று கூறினார் அண்ணாமலை. செந்தில் பாலாஜியில் ஆரம்பித்து வரிசையாக வரும். அடுத்தடுத்து வரக்கூடிய வழக்கின் தீர்ப்புகளும் இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கு நன்றி.. தமிழ்நாட்டில் இதுபோன்ற நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொன்முடி தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. அதில், மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு…
— K.Annamalai (@annamalai_k) December 21, 2023
ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில் முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என்றும் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications