Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடி மட்டுமல்ல.. இன்னும் பலர் வரிசையா வருவாங்க.. அண்ணாமலை போட்ட லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை திமுகவை புரட்டிப்போடும் என்று கூறியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் பலர் இந்த லிஸ்டில் இருப்பதாக கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையோடு 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Ponmudi case: Not only Ponmudi Many more will come in line says Annamalai

இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இது ஆரம்பம்தான் இன்னும் நிறைய பேருக்கு ஊழல் வழக்கில் தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.

அமைச்சர் ஒருவர் இலாகா இல்லாத அமைச்சராக நீண்ட நாட்களாக புழல் சிறையில் இருக்கிறார். இந்தியாவே பார்த்துக்கொண்டிருக்கிறது. தற்போது மூத்த அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பொன்முடி நீண்ட காலமாக திமுகவில் பதவியில் இருக்கிறார். அவர் இப்போது குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் வருகிறார்கள். இது ஆரம்பம்தான் என்று கூறியுள்ள அண்ணாமலை 2024ஆம் ஆண்டு மத்தியில் இன்னும் சில அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.

அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அது திமுகவை பாதிக்கும். இது தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமான தண்டனை மட்டுமல்ல என்று கூறினார் அண்ணாமலை. செந்தில் பாலாஜியில் ஆரம்பித்து வரிசையாக வரும். அடுத்தடுத்து வரக்கூடிய வழக்கின் தீர்ப்புகளும் இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடவுளுக்கு நன்றி.. தமிழ்நாட்டில் இதுபோன்ற நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொன்முடி தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. அதில், மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில் முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என்றும் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+