சட்டென முடங்கிய 'X' சோஷியல் மீடியா தளம்! குழம்பிப்போன பயனாளர்கள்.. இப்போ ஓகே
சென்னை: பிரபல சோஷியல் மீடியா தளமான 'X' சிறிது நேரம் முடங்கியது. இதனால் பயனாளர்கள் படங்கள், கருத்துக்கள், வீடியோக்கள் என எதையும் ஷேர் செய்ய முடியாமல் தவித்தனர்.
இன்டெர்நெட் எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்ததோ அந்த அளவுக்கு, சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சியும் உச்சத்தை எட்டியது. தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காக இவை இயங்கி வந்தாலும், மெல்ல அரசியல் கருத்துக்கள் மோதிக்கொள்ளும் தளமாக உருவெடுத்தது. இதில் டிவிட்டர் என்பதும் x தளம் மிக முக்கியமானதாகும். மற்ற சோஷியல் மீடியா தளங்களை காட்டிலும், x தளத்தில் அரசியல் கருத்துக்கள் அதிகமாக வெளியாகின. x தளத்தை அரசியல் களத்தின் ரத்த பூமி என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்தது.

அரசியல் தலைவர்களின் கருத்துக்களை மக்கள் மத்தியில் உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் தளமாக x தளம் இருந்ததால், இளைஞர்கள் மத்தியில் x தளத்திற்கான மவுசு அதிகரித்தது. இதில் அவ்வப்போது சில அப்டேட்டுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த சமயங்களில் x தளம் முடங்குவது இயல்பானதுதான். அந்த வகையில் தற்போது x தளம் முடங்கியது. எனவே பயனாளர்கள் படங்கள், கருத்துக்கள், வீடியோக்கள் என எதையும் ஷேர் செய்ய முடியாமல் தவித்தனர்.
மதியம் சுமார் 12 மணியளவில் முடங்கிய இந்த x தளம், சுமார் 20 நிமிடங்கள் வரை செயல்படாமல் இருந்திருக்கிறது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. x தளம் அடிக்கடி இதுபோன்று செயல்படாமல் முடங்குவதால் பயனாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.












Click it and Unblock the Notifications