ஊழியர்கள் வராததால் 5 தொகுதிகளில் தபால் வாக்குகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் ஊழியர்கள் வராததால் 5 தொகுதிகளில் தபால் வாக்குகள் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும்.

அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள தொகுதிகள், ஸ்ரீபெரும்புதூர் , திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் உள்ள காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை அளிக்கவிருந்தனர்.
காவலர்கள் வாக்குப் பதிவு செய்யும் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் சென்னை நந்தனத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தேர்தல் ஊழியர்கள் பணிக்கு வராததால் தாமதமானது.
இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து காலை 8 மணிக்கு தபால் வாக்குப் பதிவு தொடங்கியது. இதையடுத்து காவலர்கள் வரிசையில் நின்றபடி வாக்களித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications