மின்தடைக்கு சில நாட்களில் தீர்வு... தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை... அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
சென்னை: தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிலக்கரி பிரச்சனைக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடமாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீர் திடீரென்று அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் ஒரு மணிநேரம், 2 மணிநேரம் என மணிக்கணக்கிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

தமிழக அரசு மீது விமர்சனம்
இதனால் தமிழக அரசு மீது விமர்சனம் எழுந்தது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் தான் தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என விளக்கமளித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள மின்வெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக குற்றச்சாட்டு
இருப்பினும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சனம் செய்து வருகின்றன. குறிப்பாக பாஜக கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அவர் கூறுகையில், ‛‛தமிழகத்தில் செயற்கையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மத்திய அரசை காரணமின்றி திமுக அரசு குற்றம்சாட்டுகிறது'' என்றார்.

எப்படியாவது தீர்வு காணுங்க...
மின்வெட்டு பிரச்சனையில் இப்படி அரசியல் நடக்கும் நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் எப்படியாவது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் சில நாட்களில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இருக்கவே இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

நிலக்கரி வந்து சேரவில்லையே...
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார். அதன்பின் அவர் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும், நிலக்கரியும் வந்து சேராததே மின்சார பிரச்னைக்கு காரணம். தமிழகத்தின் மின் உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்ற நிலையில் குறைவான நிலக்கரி மட்டுமே கிடைக்கிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மலிவான விளம்பரம்
மின்தடை குறித்து பாஜக மாநில தலைவர் மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை தேடி வருகிறார். குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது. மின்தடை குறித்து பாஜக மாநில தலைவர் மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை தேடி வருகிறார். குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில்தற்போது ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது.

சில நாட்களில் தீர்வு
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு இரண்டு மாத காலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது'' என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications