சென்னை தாம்பரத்தில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் 5 மணிநேரம் ‛பவர்கட்’.. மக்களே கவனம்
சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக சென்னை தாம்பரத்தில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பிரச்சனையின்றி முறையாக மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகளை இந்த மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணி என்பது ஒவ்வொரு ஏரியாக்களிலும் வெவ்வேறு நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் மீதமுள்ள 6 நாட்களிலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மின்வாரியம் சார்பில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அங்கு சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 28.08.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரத்தில் கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி தாம்பரத்தில் ராஜகீழ்ப்பாக்கம் மாருதி நகர் பிரதான சாலை, ரங்கா காலனி பிரதான சாலை, நேதாஜி தெரு, காமராஜ்புரம் பிரதான சாலை, ஐயப்பா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications