சென்னையில் 26 ஏரியாக்களில் இன்று மின்தடை.. உங்கள் பகுதி இருக்கா பாருங்க.. இந்த லிஸ்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியாக்களிலும் மாதம் ஒருமுறை மின்சாரம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் என்பது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மீதமுள்ள 6 நாட்களும் ஒவ்வொரு இடங்களில் பராமரிப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது.

chennai power cut eb

அந்த வகையில் நாளை சென்னை இருளிப்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மொத்தம் 26 பகுதிகளில் நாளை 5 மணிநேரம் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 09.11.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

இருளிப்பட்டு: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்கே கார்டன், ஸ்ரீநகர், எஸ்வி பண்ணை, மாலிவாக்கம், ஆமூர் ஜகநாதபுரம் சத்திரம் மற்றும் குதிரைப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

பூந்தமல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, சீனிவாச நகர், மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று மின் விநியோகம் என்பது இருக்காது என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+