Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நாளை 5 மணிநேரம் மின்தடை.. ஊங்க ஏரியா இருக்கா? இந்த லிஸ்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. எந்தெந்த ஏரியாக்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஏரியாக்களிலும் மாதம் ஒருமுறை மின்பராமரிப்பு பணி என்பது நடத்தப்பட்டு வருகிறது.

chennai tneb power cut

அன்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் என்பது நிறுத்தப்படும். அந்த வகையில் சென்னையில் சில இடங்களில் நாளை (ஜனவரி 25) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இந்த பணியின் காரணமாக சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 25.1.2025 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

டைடல் பார்க்: தரமணியின் ஒருபகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகரின் ஒருபகுதி, எம்ஜிஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் மற்றும் கானகம்), வேளச்சேரியின் ஒருபகுதி, விஎஸ்ஐ எஸ்டேட்டின் பேஸ் 1, 100 அடி ரோட்டின் ஒருபகுதி, அண்ணா நகர், சிஎஸ்ஐஆர் ரோடு, ஆர்எம்இசட் மில்லேனியம் (கந்தன்சாவடி), சிபிடியின் ஒருபகுதி, அசென்டாஸ் மற்றும் டைட்ல பார்க், காந்தி நகர் மற்றும் அடையாரின் ஒருபகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

கிண்டி: கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கலின் முழுபகுதி, காந்தி நகர், பூந்தமல்லி ரோடு, ஜேஎன் சாலை, அம்பாள் நகர், லேபர் காலனியின் அனைத்து தெருக்கள், பிள்ளையார் கோவிலின் 1முதல்தெருக்கள், ஏ, பி, சி, டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு பேஸ், மவுண்ட் ரோட்டின் ஒருபகுதி, பாலாஜி நகர், பாரதியார் நகர், தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காலை 9 மணிக்கு முன்பாகவே மின்சாதனங்களை பயன்படுத்தி செய்ய வேண்டிய வேலைகளை முடித்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+