பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா! மாதம் ரூ.36 பிரீமியத்தில் 2 லட்சம் காப்பீடு! அசத்தல் திட்டம்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய தனிநபர்களுக்கு நிதி உதவி மற்றும் மருத்துவக் காப்பீட்டை வழங்குவதை நோக்கமாக கொண்டதுதான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டமாகும்.. இது மலிவு விலையில் ஆயுள் காப்பீட்டையும் வழங்குகிறது. PMJJBY என்று சொல்லப்படும் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் சிறப்பியல்புகள் என்னென்ன? தெரியுமா?
நாடு முழுவதும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய தனிநபர்களுக்கு அத்தியாவசிய நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட காப்பீடு திட்டம்தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) திட்டமாகும்.

மருத்துவ காப்பீடு PMJJBY
ஆண்டுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது. PMJJBY என்ற இந்த திட்டத்தின் பிரீமியம் மிகவும் குறைவாகும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டப்பலனை பெறுவதற்கு, வருடம் வெறும் ரூ.436 பிரீமியம் செலுத்தினால் போதும். அதாவது மாதத்துக்கு ரூ.36 என்ற அளவில் ப்ரீமியம் செலுத்தலாம். இதனால் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
காப்பீடு எடுத்திருப்பவர் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவரது நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்..
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
இந்த பணத்தை நாமினி பெற வேண்டுமானால், பாலிசிதாரரின் நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விண்ணப்பித்து, பாலிசிதாரரின் இறப்பு சான்றிதழ், மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்டவற்றை ஆவணமாக தந்தால் போதும். அடுத்த ஒரு மாதத்துக்குள் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆவணங்களை சரிபார்த்து காப்பீட்டு பணத்தை வங்கி கணக்கில் அனுப்பிவிடும்.
வயது வரம்பு & விதிமுறைகள்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் சேர, 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.. எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, அஞ்சல் அலுவலகங்களில் தனிப்பட்ட அக்கவுண்ட் உள்ளவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ஆனால், பேங்கில் அக்கவுண்ட் செயல்பாட்டில் இருக்கும்படியும், ப்ரீமியம் எடுக்கும்போது போதுமான பணம் வங்கி கணக்கில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்..
முக்கியமாக, உங்களது வங்கி கணக்குடன் வங்கி கணக்கோடு ஆதார் நம்பரையும் இணைத்திருக்க வேண்டும். ஒரு வருட இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது என்பதால், வருடந்தோறும் புதுப்பிக்க வேண்டும்.. அரசின் இந்த திட்டத்தில் காப்பீட்டு பிரீமியமாக டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு பெறலாம்.
ஒவ்வொரு வருடம் மே 31ம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கில் இருந்து வருடத்துக்கு ரூ.436 டெபிட் செய்யப்படும். அந்தவகையில், ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications