முறுக்கு கையுடன் பெரியார் , அம்பேத்கர் புகைப்படம்.. சனாதனம் குறித்து பிரகாஷ் ராஜ் விமர்சனம்
சென்னை: சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சனாதனம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பேசிய போதெல்லாம் திமுக எதிர்வினையாற்றி வந்தது. இந்த நிலையில் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த கருத்து பெரும் புயலை கிளப்பியுள்ளது.

உதயநிதி மீது நடவடிக்கை கோரி பாஜகவினர் புகார்களை கொடுத்த வண்ணம் உள்ளனர். அப்படி அவர் என்னதான் பேசினார் என்பதை பார்ப்போம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் இந்த மாநாட்டின் தலைப்பே என்னை கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.
அந்த வகையில் சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்து கட்ட வேண்டும். அதை போலதான் இந்த சனாதனத்தையும் எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். சனாதனம்னா என்ன, சனாதனம் என்ற பெயரோ சமஸ்கிருதத்தில் இருக்கிறது. சனாதனம் என்பது சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாறாது என்று பொருள். ஆனால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதையும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என உருவானதுதான் திராவிட இயக்கமும் கம்யூனிச இயக்கமும்! இவ்வாறு உதயநிதி தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், வழக்கு பதிவு செய்வதாகவும் அறிவித்தனர். ஆனால் உதயநிதியோ எந்த வழக்கையும் தாம் சந்திக்க தயாராக இருப்பதாகவும், சனாதனத்திற்கு எதிராக எப்போதும் பேசுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜும் சனாதனம் குறித்து பேசியுள்ளார்.
Hindu s ar not #TanaThanis .. Tanathanis are #AntiHumans .. RT if you agree. Happy Sunday to all #justasking pic.twitter.com/3GZYXdVygg
— Prakash Raj (@prakashraaj) September 3, 2023
அதில் இந்துக்கள் தனாதனியர்கள் அல்ல. ஆனால் தனாதனிகள் தேச விரோதிகள் என ட்விட் போட்டதுடன் பெரியாரும் அம்பேத்கரும் கையை முறுக்கியபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சனாதன தர்மத்தை விமர்சிக்க கம்யூனிஸ்ட்கள் பயன்படுத்தும் வார்த்தைத்தான் தனாதனி. அதைத்தான் பிரகாஷ் ராஜ் பயன்படுத்தியுள்ளார்.
Back to the Future ..a #Tanathani parliament.. dear CITIZENS are you okay with this… #justasking pic.twitter.com/N57FU1Q5gi
— Prakash Raj (@prakashraaj) September 4, 2023
மேலும் இன்னொரு ட்வீட்டில் பிரகாஷ் ராஜ் செங்கோல் நிறுவும் விழாவின் போது பல்வேறு ஆதினங்கள் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு எதிர்காலத்தில் தனாதனி நாடாளுமன்றம் ஏற்படலாம். அன்பான குடிமக்களே இதை நீங்கள் ஏற்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்!











Click it and Unblock the Notifications