மறைந்த விஜயகாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் -பிரேமலதா கோரிக்கை
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் தமிழக அரசு மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே விஜயகாந்துக்கு அவர் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த ஊரான மதுரையில் சிலை நிறுவ வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இப்போது விஜயகாந்த் குடும்பத்தினரும் சிலை நிறுவுவது தொடர்பாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விஜயகாந்த் மறைவுக்கு பிறகு பிரேமலதா முன் வைத்துள்ள முதல் கோரிக்கை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமனாலும் வரலாம் என்றும் இன்று முதல் யாருக்கும் எந்த தடையும் கிடையாது எனவும் கூறினார்.
தன்னால் சாப்பிட முடியவில்லை என்றும் சப்பாட்டில் அமர்ந்தாலே விஜயகாந்தின் முகம் தான் தெரிவதாகவும் கண்ணீர் மல்க கூறிய அவர், தமிழக அரசுக்கும், காவல்துறையினருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூன்று முறை வந்ததை சுட்டிக்காட்டிய பிரேமலதா, வார்த்தைகளால் நன்றி என்று சொல்லி அதனை சிறுமைப்படுத்த விரும்பவில்லை என்றார்.
விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகளையும், கடமைகளையும் நிறைவேற்றி அவரது நினைவிடத்தில் வெற்றிக்கனியை சமர்பிப்போம் என உறுதி பூண்ட அவர், விஜயகாந்தின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார். கட்சி, சாதி, மதம், இனம், மொழி, என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட மனிதர் விஜயகாந்த் என்பது தான் அவருக்கு கிடைத்த பாக்கியம் என்றார். பிரேமலதாவுடன் அவருடைய சகோதரர் எல்.கே.சுதீஷ், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகிய இருவரும் உடனிருந்தனர்.
விஜயகாந்த் குடும்பத்தினர் தேமுதிக தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பிறகு கட்சி தொண்டர்கள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications