Premalatha Mother: "அம்மா BYE மா"! தாய் அம்சவேணிக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய பிரேமலதா!
சென்னை: தாய் அம்சவேணியின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடந்த நிலையில் வீட்டிலிருந்து அவரது உடல் ஊர்வலமாக புறப்பட்ட போது "அம்மா BYE மா" என கண்ணீருடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தனது தாயை வழியனுப்பி வைத்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மாமியாரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயுமான அம்சவேணி, நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

அம்சவேணி தனது கணவர் இறந்ததும் குடியாத்தத்தில் இருந்து சென்னையில் உள்ள தனது மகன் சுதீஷ் வீட்டில் இருந்தார். இவருக்கு ராதா, பிரேமலதா, சுதீஷ் ஆகிய இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அம்சவேணி அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்பது அவரது இறப்புக்கு வந்தவர்களை பார்க்கும் போதே தெரிகிறது.
நேற்றைய தினம் காலை அம்சவேணியின் உயிர் பிரிந்த போது மகள் பிரேமலதாவும் மகன் சுதீஷும் எதிர்பாராதவிதமாக ஈரோட்டில் பூத் முகவர்கள் கூட்டத்திற்கு சென்றிருந்தனர். அவர்களுக்கு இந்த துக்க செய்தி தெரிவிக்கப்பட்டதும் அந்த கூட்டங்களை ரத்து செய்துவிட்டு கண்ணீருடன் இருவரும் சென்னைக்கு வந்தனர்.
அம்சவேணியின் இறப்புக்கு, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் தனது தாயை பார்க்க சுதீஷுடன் சாலிகிராமம் இல்லத்திற்கு நேற்று பிரேமலதா வந்தார். அவர் தனது தாயின் உடலை பார்த்து "அம்மா அம்மா..." என கதறி அழுதார். பின்னர் தனது மூத்த சகோதரி ராதாவை கட்டி அணைத்து கதறி அழுதார். இதை பார்த்தோரும் கலங்கினர்.
தனது பாட்டி அம்சவேணி இறந்ததை அறிந்து மாமா சுதீஷ் வீட்டிற்கு விஜய பிரபாகரனும் சண்முகபாண்டியனும் வந்தனர். அப்போது அவர்களை அழைத்துச் சென்று தனது தாயின் உடலை காட்டினார் சுதீஷ். உடனே இருவரும் அழுதனர். இதையடுத்து பிரேமலதா, "உங்களை தூக்கி வளர்த்த பாட்டியை பாருங்கப்பா, பாட்டி டேடிகிட்ட (விஜயகாந்த்) போய்ட்டாங்கப்பா" என கதறிய பிரேமலதா, "அம்மா பசங்க வந்திருக்காங்க பாருங்கம்மா, பேரனுங்க வந்திருக்காங்க, எழுந்து பாருங்க" என கண்ணீர் விட்டார்.
இந்த நிலையில் அம்சவேணியின் உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் நடந்தன. மாலை 4 மணியளவில் சாலிகிராமத்தில் இருந்து போரூர் மயானத்திற்கு அம்சவேணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அம்மாவை வழியனுப்ப பிரேமலதா, ராதா உள்ளிட்டோர் வீதி வரை வந்தனர். தனது அம்மாவின் ஊர்வலம் தொடங்கியதும் பிரேமலதா, கண்ணீருடன் "அம்மா BYE மா" என தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications