ராஜகுருவாக இருந்தா விஜய் பர்சனலாக வச்சிக்கணும்! கொதித்த பிரேமலதா! தடுக்காத சபாநாயகர்
சென்னை: விஜய்யின் ராஜகுருவுக்கு அரசு பதவி ஏன் கொடுக்கப்பட்டது என்பதை முதல்வர் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக எம்எல்ஏவும் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை வாக்கெடுப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிக்கவில்லை.
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தேமுதிகவின் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், முதல்வர் விஜய், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது போல் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்ததும் நல்ல திட்டமாகும். குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகாருக்கு விஜய் முதலில் பதிலளிக்க வேண்டும். அவரது வீட்டிற்கு முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார் என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும்.
அது போல் விஜய்யின் ராஜகுருவுக்கு அரசு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ராதந் பண்டிட் அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தமிழகத்தில் உள்ள அனைவரும் கண்டித்து வருகிறார்கள். உங்களுக்கு ஆஸ்தான குரு என்றால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள் என பிரேமலதா கடுகடுப்பாக பேசினார்.
மன்னார்குடி சுயேச்சை எம்எல்ஏ காமராஜை, சபாநாயகர் தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம் என கூறி தடுத்து நிறுத்தினார். ஆனால் பிரேமலதா பேசியதை அவர் கண்டிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications