வைஷாலியின் கழுத்தில் பாருங்க.. சென்னையில் வசமாக சிக்கிய பாதிரியார்.. முடிவுக்கு வந்த நாடகம்
சென்னை: சென்னையில் மனைவியை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்த பாதிரியார், உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக நாடகம் ஆடினார். ஆனால் அவர் கழுத்தில் இருந்த காயத்தால் வசமாக சிக்கி கொண்டார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே குணாபா பகுதியைச் சேர்ந்த 35 வயதாகும் பாதிரியார் விமல் ராஜ்க்கு, அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதாகும் வைஷாலி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு வருடம் முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த பொன்மார் பகுதிக்கு விமல்ராஜ் வந்து குடியேறினார். அங்கு அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக அவர் பொறுப்பேற்றார். இதனிடையே சென்னையில் வசித்து வந்த பாதிரியார் விமல் ராஜ்க்கும் அவரது மனைவி வைஷாலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, சென்னை மேடவாக்கம் அடுத்த ஒட்டியம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த விமல் ராஜ் தனது மனைவி வைஷாலி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும் அதனால் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இதை நம்பிய விமல்ராஜ்ஜின் பெற்றோர் உடலை வீட்டில் வைத்து வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
மும்பையில் இருந்து நேற்று முன் தினம் மாலை ஒட்டியம்பாக்கத்துக்கு வந்த வைஷாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால் குமார் ஆகியோர் உடலை பார்த்த கதறி அழுது கொண்டிருந்தனர். அப்போது வைஷாலியின் கழுத்தில் பார்த்த போது காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாழம்பூர் போலீஸில் வைஷாலியின் சகோதார் விஷால் குமார் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸாரிடம் உண்மையை மறைக்க பாதிரியார் முயன்ற போது, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்த பாதிரியார் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கல்யாணம் ஆனதில் இருந்தே தனக்கும் தன் மனைவி வைஷாலிக்கும் தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்தது என்றும். நேற்றுமுன்தினம் தகராறு முற்றியதில் அவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்ததாகவும் கூறினார். ஆத்திரத்தில் கொலை செய்ததால், கொலையை மறைக்க விரும்பி பாதிரியார் விமல்லாஜன் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியதாக கூறியிருக்கிறார்.
இதனையடுத்து தாழம்பூர் போலீசார் பாதிரியார் விமல்ராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ததுடன், கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிரியார் மனைவியை கொன்று நாடகமாடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications