தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
சென்னை: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் வீட்டு பணிப்பெண், அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞானவேல்ராஜா , சூர்யா, கார்த்தியின் படங்களை தயாரித்து வந்தார். அவர் ஸ்டூடியோ கிரீன், ஆத்னா ஆர்ட்ஸ் என்ற இரு ஸ்டூடியோக்களை வைத்துள்ளார். இவருக்கு மனைவி நேகா.

ஞானவேல்ராஜா, நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு தூரத்து உறவினர். இந்த நிலையில் சில்லுனு ஒரு காதல், பருத்திவீரன், சிங்கம், நான் மகான் அல்ல, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவரது வீட்டில் கடந்த 14 ஆம் தேதி நகைகளை காணவில்லை நேகா, மாம்பலம் போலீஸில் புகார் அளித்தார். அதில் தனக்கு பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் இருந்தார். இதையடுத்து பணிப்பெண் லட்சுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது "நான் நகைகளை திருடவில்லை" என லட்சுமி கூறினாராம். இருந்தும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் எழுதி வாங்கிக் கொண்டு லட்சுமியை அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்தது குறித்து மனஉளைச்சலில் இருந்தாராம் லட்சுமி.
அப்போது அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர், லட்சுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது தாயை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்ததாகவும் அதனால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஞானவேல்ராஜா மனைவி நேகா மீது லட்சுமியின் மகள் புகார் அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் ஈஸ்வரி, தங்கம், வைரம், பவளம் உள்ளிட்ட நகைகளை திருடி பிளாட் வாங்கியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அது போல் பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டிலும் பணியாளர் ஒருவர் நகைகளை திருடியதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் அவருடைய மனைவி புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த விசாரணைக்கு விஜய் ஜேசுதாஸ் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
அது போல் நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு நடந்திருந்த போதிலும் அந்த பணிப்பெண் மீது அவர் போலீஸில் புகார் ஏதும் கொடுக்கவில்லை.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications