பாகப்பிரிவினை சொத்து.. கிளாஸ் டம்ளரில் மாமியாரை அடித்தே சாய்த்த மருமகள்! பார்த்தாலே இதயம் நொறுங்குதே
சென்னை: இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி, மொத்த பேரையும் பதற வைத்து வருகிறது.. ஒரு பெண் தன்னுடைய மாமியாரை மிக குரூரமாக அடித்து தாக்கும் இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்குமே, ஈரக்குலையே நடுங்கிவிடுகிறது. இந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்கும் சென்றதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. மற்றொருபுறம் அப்பெண்ணுக்கு கடுமையான கண்டனங்களை இணையவாசிகள் தெரிவித்து வருகிறார்கள். என்ன நடந்தது?
பஞ்சாப் மாநிலம் கோத்தே கிராமத்தை சேர்ந்த பெண் குர்பஜன்கவுர்.. இவர் தன்னுடைய கணவரின் மரணத்திற்கு பிறகு, மகனின் வீட்டில் வசித்து வந்தார்.

சொத்து பிரச்சனை
கடந்த சில நாட்களாகவே இவர்களது வீட்டில் சொத்து பிரச்சனை வெடித்துள்ளது.. இதில், சொத்துக்களை பெயர் மாற்றுவது தொடர்பாக மருமகள் ஹர்ஜீத்கவுர் என்பவருக்கும், மாமியார் குர்பஜன்கவுர் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று, மொத்த சொத்தையும் தன்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டும் என்று மருமகள் ஹர்ஜீத்கவுர், வயதான மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, ஆத்திரமடைந்த மருமகள், தன்னுடைய மாமியாரை கொடூரமாக தாக்க துவங்கிவிட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது.. அந்த வீடியோவில், மாமியார் குர்பஜன்கவுரின் தலைமுடியை பிடித்து இழுத்து மறுபடியும் மறுபடியும், அவரை கண்மூடித்தனமாக தாக்குகிறார் மருமகள் ஹர்ஜீத்கவுர்..
பாட்டியை ஏன் அடிக்குறே
இதை பார்த்த ஹர்ஜீத்கவுரின் மகன் ஓடிவந்து, "அம்மா, ஏன் பாட்டியை அடிக்கிறீங்க? உடனே அடிக்கிறதை நிறுத்துங்க" என கெஞ்சுகிறான். ஆனாலும் மகன்
சொல்வதை காதிலேயே போட்டுக் கொள்ளாத ஹர்ஜீத்கவுர், தொடர்ந்து மாமியாரை ஸ்டீல் டம்ளரில் அடித்து விளாசுகிறார்.. வலி பொறுக்க முடியாமல், மாமியாரின் கண்கள் கலங்குகின்றன.
இதற்கு பிறகு அந்த சிறுவனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல், தன்னுடைய பாட்டியை அம்மா ஈவிரக்கமின்றி தாக்குவதை, செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டான்.
இந்த வீடியோவை பார்த்த அனைவருமே கடுமையான கண்டனம் தெரிவிக்க துவங்கினர்.. சம்பந்தப்பட்ட மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
முழு சொத்துக்களுக்கும் குறி
இதனிடையே, இந்த வீடியோ வைரலானதையடுத்து, பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமியார் குர்பஜன்கவுரின் கணவர் தொடக்க கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்... கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.. எனவே சமீபகாலமாகத்தான் தன்னுடைய மகன் வீட்டில் வசித்து வருகிறார்..
அதற்குள் முழு சொத்துக்களையும் தன்னுடைய பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் தொந்தரவு செய்ய ஆரம்பித்து, இப்போது மனசாட்சியே இல்லாமல் வெளுத்து எடுத்துள்ளார்.
மாமியாரை உதைத்த மருமகள்
சில மாதங்களுக்கு முன்புகூட கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இப்படியொரு சம்பவம் நடந்தது.. தேவலக்கரையைச் சேர்ந்த தம்பதி தாமஸ் - மஞ்சுமோள்.. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
தாமஸின் அம்மா எலியம்மா வர்கீஸுக்கு 80 வயதாகிறது.. இவர் தாமஸ் வீட்டிலேயே இருந்து வருகிறார்.. ஆனால், மாமியாரை, வர்கீஸ் மனைவி மஞ்சுமோள் சரியாக நடத்துவதில்லை..
சம்பவத்தன்று சேரில் உட்கார்ந்து , மாமியார் எலியம்மா டிவி பார்த்து கொண்டிருந்தார்.. அப்போது மஞ்சுமோள் குழந்தை உட்கார சேர் கேட்டுள்ளது.. காது கேட்காததால், எலியம்மா டிவி பார்த்தபடியே இருந்துள்ளார்..
உடனே ஆவேசமடைந்த மஞ்சுமோள், மாமியாரை கடுமையாக திட்டி, சேரில் உட்கார்ந்திருந்த மாமியாரை, இரு கைகளாலும் பிடித்து கொடூரமாக கீழே தள்ளிவிட்டார்.. இதில், கீழே தொப்பென்று விழுந்த எலியம்மா முட்டி, கைகளில் அடிபட்டு, வலியால் அழுதார்
பள்ளி ஆசிரியர்
இந்த சம்பவத்தை வீட்டிலிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர்.. தன்னை வீடியோ எடுப்பது தெரிந்தும்கூட, மஞ்சுமோள் அசராமல், நல்லா வீடியோ எடு என்று சொல்லி தன்னுடைய மேலாடையை உயர்த்தி காட்டினார்.. இந்த மஞ்சுமோள் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவராம்.
தன்னுடைய அம்மாவை கொடூரமாக மனைவி தாக்குவதை, மகன் தாமஸ் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.. உடனே இதை பார்த்த கேரளா போலீசார் மஞ்சுமோளை கைது செய்து அழைத்து சென்றது நினைவிருக்கலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications