முரசொலி நில விஷயத்தில் காட்டிய வேகம்...மற்றதில் இல்லை.. தேசிய பட்டியலின ஆணையத்தை கலைக்க கோரி வழக்கு
சென்னை: தேசிய பட்டியலின ஆணையத்தை கலைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பட்டியலினத்தை சேராதவரும், பாஜக-வை சேர்ந்தவர் புகார் அளித்தால்,உடனடியாக ஆணையம் செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் பரமக்குடியில் பட்டியலினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம், கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பட்டியலின மக்கள் பலியானது உள்ளிட்ட பல விவகாரங்களில் தேசிய பட்டியலின ஆணையம் இதுவரை எந்த முக்கிய நடவடிக்கைகளையும் எடுக்காமல் முடங்கி இருப்பதால் தேசிய பட்டியலின ஆணையம் அந்த நோக்கத்திற்கு மாறாக அரசியல் ஆதாயம் அடையும் நோக்கத்தில் ஆணையம் செயல்படுவதால் அதை கலைக்க உத்தரவிட கோரி மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது குடியரசு தலைவர் அலுவலகத்தின் செயலாளர் மற்றும் மத்திய அரசு ஆகியோர் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்












Click it and Unblock the Notifications