நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற்று தடை செய்ய வேண்டும்.. சீமானுக்கு எதிராக புகழேந்தி மனு
டெல்லி: நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை திரும்ப பெற்று தடை செய்ய வேண்டும் என்றும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, மதம், ஜாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார.
டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பொதுக் கூட்டங்களில் பரப்புரையாற்றும் போது, கடுமையான மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற தலைவராக விளங்கும் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏளனமாக பேசுவது மற்றும் மதம், ஜாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக குண்டு கையில் இருப்பதாகவும், அதை இன்னும் வீசவில்லை என தலைவன் கொடுத்த அந்த குண்டை வீசினால் முற்றிலுமாக பற்றி எரிந்து விடும்.. அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.. ஒரு கோடி எரிமலையை காத்த தீ தான் எனது தலைவன் நாங்கள் கொளுத்தி போட்டுட்டு போயிடுவோம்.. தமிழகமே பற்றி எரியும் என ஈரோடு இடைதேர்தல் பிரச்சார மேடையில் சீமான் பேசியுள்ளார்.
மேலும் கொலை வெறியில் உள்ளதாகவும் ஆவேசமாக சீமான் மிரட்டி உள்ளார்.. இவரை போலவே இவரது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை முருகன் என்பவர் பிரச்சார மேடையை பயன்படுத்தி செருப்பை தூக்கி பொதுமக்களிடம் காண்பிக்கிறார்.. அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார்.. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயரை பயன்படுத்தி மிரட்டி வருகிறார் ..
இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பெரியதொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகும் என புரிந்து கொள்ள முடிகிறது. அமைதியான முறையில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.. ஆகவே இவரின் நாம் தமிழர் கட்சியினுடைய அங்கீகாரத்தை ரத்து செய்து இவரது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றி விரிவாக தனது மனுவில் குறிப்பிட்ட புகழேந்தி அவர் பேசியதை ஆதாரத்தோடு மனுவில் இணைத்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஈரோடு மாவட்ட ஆட்சியர். தலைமை தேர்தல் கண்காணிப்பாளர் தலைமை தேர்தல் கண்காணிப்பாளர். மாநில தலைமை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications