நாளை 10,000 இடங்களில் உண்ணாவிரதப் போர்... புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அறிவிப்பு..!
சென்னை: தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் நாளை 10,000 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலின பிரிவில் இருந்து மாற்றக்கோரி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகிறார் கிருஷ்ணசாமி. கடந்த மக்களவைத் தேர்தலின் போது கூட, மதுரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இது தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கியதாக தெரியவில்லை. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கையை முன்னிறுத்தி மீண்டும் போராட்டங்களை தொடங்கியிருக்கிறார் கிருஷ்ணசாமி.
அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேவேந்திர குல வேளாளர்கள் வசிக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் பெருமளவில் திரண்டு பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை அல்லது கோவையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே வரும் தேர்தலில் ஆதரவு என்ற நிலைப்பாட்டையும் அவர் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications