முழு கொள்ளளவை எட்டியது புழல் ஏரி! 3,300 மில்லியன் கன அடி நீர் இருப்பு.. நீர் திறப்பு அதிகரிப்பு!
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 470 கன அடியில் இருந்து 640 கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வந்ததன் காரணமாக புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், மீண்டும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழையைக் கொடுத்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், புழல் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், புழல் ஏரி முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 470 கன அடியில் இருந்து 640 கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 21.2 அடியை எட்டி உள்ளதால், நீர் திறப்பு தற்போது 300 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications