நாளை இரவு வானில் நடக்க உள்ள அதிசயம்.. மிஸ் பண்ணாதீங்க மக்களே! கண்களுக்கு விருந்து
சென்னை: ஒவ்வொரு நாளும் இரவில் வான்வெளியில் பல அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வகையில், நாளை தொடங்கி டிச.4ம் தேதி வரை விண்கல் மழை பொழிய உள்ளது. இதனை வெறும் கண்களால் கண்டு ரசிக்கலாம்.
விண்கல் மழை: ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட நாட்களில் விண்கற்கள் மழை பொழியும். இதற்கு காரணம் வால் நட்சத்திரங்கள்தான். வால் நட்சத்திரங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இது பூமியின் சுற்றுவட்ட பாதை வழியாக போகும் போது அதன் தூசிகளை, சிறு கற்களை விட்டு விட்டு செல்லும். பூமி இந்த தூசி துகள்களுக்கு அருகே வரும்போது, அந்த துகள்கள் ஈர்ப்பு விசையால் பூமிக்குள் நுழைகின்றன. இப்படி நடக்கும்போது வளிமண்டலத்தில் உரசி தூசிகள் எரிந்துவிடும். இதை பார்ப்பதற்கு விண்கல் மழையை போல தோன்றும்.

நாளை அதிசயம்: அந்த வகையில் நாளை குவாட்ரண்ட் விண்கல் மழை பொழிய இருக்கிறது. டிச.17ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை இந்த விண்கற்கள் பூமி மீது பொழியும். ஆனால் ஜன.3 மற்றும் 4ம் தேதிகளில்தான் இது உச்சத்தை எட்டும். அதாவது நாளையும் நாளை மறுநாளும்தான் வானத்தில் நூற்றுக்கணக்கில் விண்கற்கள் மழையாய் பொழியும். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே இது நீடிக்கும் என்பதால், வாய்ப்பு இருப்பவர்கள் பார்க்க தவறாதீர்கள். இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
அதிவேகம்: இந்த விண்கற்கள் பூமி மீது மணிக்கு சுமார் 14,8059 கி.மீ வேகத்தில் மோதுகிறது. ஆனால் நமது வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகம். எனவேதான் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 120 விண்கற்கள் வரை பூமிக்குள் நுழைகின்றன. வழக்கமாக சில விண்கல் நிகழ்வுகளை வெளிநாடுகளில் மட்டுமே பார்க்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த விண்கல் மழையை இந்தியாவிலிருந்தே கண்டுகளிக்கலாம்.
சென்னையில் இருந்து பார்க்க முடியுமா?: சென்னையில் ஒளி மாசு அதிகம். எனவே இங்கிருந்து பார்த்தால் தெளிவாக தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் சென்னைக்கு அருகே திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து பார்த்தால் தெளிவாக தெரியும். இங்குள்ள வைணு பாப்பு வான் ஆய்வகத்திற்கு அருகே ஒளி மாசு குறைவு. அங்கிருந்து பார்த்தால் விண்கல் மழையை அருமையாக ரசிக்கலாம். ஆய்வகத்துக்கு சென்று அங்குள்ள கருவிகளை கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆய்வகம் அமைந்துள்ள பகுதியில் நின்று வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே விண்கல் மழையை ரசிக்க முடியும்.
திருப்பத்தூர் மட்டுமல்லாது, சென்னையை சுற்றி ஒளி மாசு எங்கு குறைவாக இருக்கிறதோ அங்கிருந்து பார்த்தால் கூட இதை கண்டு ரசிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். என்ன மக்களே அதிசயத்தை பார்க்க நீங்கள் ரெடியா?
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications