"அம்மாவே போய் சேர்ந்துட்டாங்க! அப்புறம் என்ன அம்மா உணவகம்..?" ஆர்.எஸ். பாரதி சர்ச்சை பேச்சு
சென்னை: அம்மா உணவகம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை விமர்சித்த ஆர். எஸ் பாரதி, அம்மாவே போய் சேர்ந்துடுச்சு, அப்புறம் எதற்கு அம்மா உணவகம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சென்னை ராயபுரத்தில் நடந்த சென்னை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், ஆலந்தூர் அம்மா உணவகம் அரசுப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"அம்மாவே போய் சேர்ந்துருச்சு, அப்புறம் என்ன அம்மா உணவகம் ? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்ட எடப்பாடி கும்பல், ஏதோ 150 பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அம்மா உணவகத்தை எல்லாம் திமுக மூடிவிட்டது என்பது போல் பேசி வருகிறார்.
வீணாய் போன உணவுகளை எல்லாம் ஜெயலலிதா அரசு, அம்மா உணவகத்தில் பரிமாறியது. அம்மா உணவகத்தில் இரவில் பரிமாறப்படும் சப்பாத்தி, குருமாவை இங்கிருக்கும் பீகார், உத்தரப்பிரதேசக்காரன் தான் மொத்தமாக சாப்பிடுறான். நம்ம வரிப்பணத்தை செலவு செய்து அவனுக்குத்தான் சாப்பாடு போடுகிறோம்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மகாத்மா காந்தியின் ஆட்சி. திமுக தொண்டர்கள் வட்டச் செயலாளர் மீது குறை இருந்தால் பகுதி செயலாளரிடம் கூறுங்கள். பகுதி செயலாளர் மீது குறையிருந்தால் மாவட்ட செயலாளரிடம் கூறுங்கள்.
மாவட்டச் செயலாளர்கள் அல்லது எம்எல்ஏக்கள் மீது ஏதேனும் குறை இருந்தால் நேராக திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்து என்னிடம் புகார் அளியுங்கள். எந்த நேரத்தில் யார் வந்து புகார் சொன்னாலும் கேட்க நான் தயார். அவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: திமுக பவள விழாவை கொண்டாடுகிறது. 75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது என்பது சாதாரண விஷய் கிடையாது. திமுகவுக்கு இது மிகப் பெரிய நிகழ்ச்சி. எங்கள் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகவில்லை.
புதிதாக எங்கள் கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது. ஓபிஎஸ் எப்படியாவது அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க வேண்டும் என போராடி வருகிறார். அதற்காகவே வேலுமணி, வைத்திலிங்கம் மீது திமுக ஆட்சியில் பொய் வழக்குப் பதிவு செய்யப்படுவதாக கூறியுள்ளார். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
இறந்தவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஒருமையில் அதுவும் முன்னாள் முதல்வர் என பாராமல் ஜெயலலிதாவை, ஆர். எஸ்.பாரதி விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications