Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகா இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என சொன்னது சர்ச்சையாகி உள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

Radhika sarathkumar s video is being trolled on social media

மாலை 6 மணி வரை வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்காக 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் 8050 வாக்குச் சாவடிகளாக பதற்றமானவை என்றும் 183 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு கூறியிருந்தார்.

Radhika sarathkumar s video is being trolled on social media

தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக முதல் ஆளாக தன்னந்தனியாக வருகை தந்த நடிகர் அஜித், தனது வாக்கை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவு செய்தார்.

அஜித் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு நீல நிற ஜீன்ஸ் பேண்டை அணிந்திருந்தார். கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார். கருப்பு எஸ்யூவி காரில் வந்தார்.

அது போல் இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்தார்.

இவர்களைப் போலவே நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா ஆகியோர் கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

ராதிகாவிடம் விருதுநகர் தொகுதிக்கு செல்லவில்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "சென்னையில் எனக்கு வாக்கு உள்ளது. அதை செலுத்த வேண்டி வந்தேன். அடுத்து விமானம் பிடித்து விருதுநகர் செல்கிறேன்.

Radhika sarathkumar s video is being trolled on social media

எனது தொகுதியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடப்பதாக கட்சியினர் சொன்னார்கள். அமைதியான முறையில் நடந்து வருவதாகவும் சொன்னார்கள்" என்றார்.

அடுத்ததாக அவர் "எனக்குத் தெரிந்து மோடியை மட்டும்தான் பிரதமராக அறிவித்திருக்கிறார்கள். வேறு யாரையும் சொல்லவில்லை. ஆகவே மோடி தான் அடுத்த பிரதமர். அது உறுதி" என்றார் ராதிகா.

உடனே செய்தியாளர் ராதிகாவிடம் மக்கள் என்ன மாதிரியான மனநிலையில் உள்ளார்கள் என்று கேட்டார். அதற்கு உடனடியாக ராதிகா சரத்குமார், "மக்கள் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்கிறார்கள்" என்றார்.

மாற்றம் என்றால் 'இந்தியா கூட்டணி வரவேண்டும்' என்கிறீர்களா? என்று ஒரு கொக்கி கேள்வியை போட்டார் செய்தியாளர்.

Radhika sarathkumar s video is being trolled on social media

அதற்கு மிக அமைதியாக சிறிது நேரம் எடுத்து கொண்டு ஒரு க்யூட் ரியாக்‌ஷ்ன் கொடுத்தார். பின்னர் மெலிதாக புன்னகைத்த ராதிகா, "மாற்றம் என்று இந்தியா கூட்டணியை சொல்லவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகப் பெரிய மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றேன். ஆகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோகமாக வெற்றிபெறும்" என்றார்.

அவர் மறுத்து சொன்னாலும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களில் ராதிகா மாற்றம் வர வேண்டும் என நாக்குத் தவறி சொன்ன வீடியோ பதிவை போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+