அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: கடந்த சில நாட்களாகவே தான் முக்கியமான முடிவை அறிவிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறி வந்தார். இதையடுத்து அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறாரா? என்கிற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "நான் ஒரு வீடியோவை போட்டியிருந்தேன். அதில் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்று கேட்டிருந்தேன். இதற்கு வயது வித்தியாசம் இல்லாமல் வரவேற்பு இருந்தது.

நான் ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். விரைவில் அனைத்து ரசிகர்களையும் வரவழைத்து, என்னுடைய அம்மாவை வைத்து அந்த விஷயத்தை சொல்ல இருக்கிறேன். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு முக்கியம். என்னை உரிமையோடு அரசியலுக்கு அழைக்கின்றனர்.. என் அம்மாவின் முன்னிலையில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து லாரன்ஸ் அரசியலுக்கு வருவாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நான் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறேன். அதை விரைவில் அறிவிப்பேன். அரசியலுக்கு வர விருப்பம் இருந்தால் உடனே வர வேண்டியதுதானே! ஏன் மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்? என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எனவேதான் மக்களிடம் நான் கேட்டேன். இது என்னுடைய பாணி" என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், விரைவில் அனைவர் முன்னிலையிலும் இதை தெளிவுப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications