ராகுல் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு- தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு காங். கறுப்பு கொடி: செல்வபெருந்தகை
சென்னை: ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை சென்னை விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை தொடங்கிவைக்கிறார். மாலை 4 மணியளவில் பிரதமர், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இதர ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார். மாலை 4.45 மணியளவில் பிரதமர், சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். மாலை 6.30 மணியளவில் சென்னை அல்ஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 9-ந் தேதி காலை 7.15 மணிக்கு பிரதமர் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் செல்கிறார். முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் அவர் செல்வார். காலை 11 மணியளவில் பிரதமர், மைசூரு கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்வார்.

தமிழ்நாட்டி திமுக ஆட்சி அமைந்த பின்னர் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முன்னரைப் போல பிரதமர் மோடிக்கு திமுக ஆட்சியில் கறுப்பு கொடி, கறுப்பு பலூன்கள் காட்டப்படவில்லை. இந்த நிலையில் காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் கறுப்பு கொடி காட்டுவோம் என திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் செல்லும் இடம் எங்கும் கறுப்பு கொடி காட்டுவோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இதனை அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக காங்கிரஸ் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டுகிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
-
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications