கருணாநிதி சிலை திறப்பு.. ராகுல் காந்தியும் வருகிறார்!
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கவுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலய வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனியா காந்தியுடன் இணைந்து ராகுல் காந்தி விழாவில் பங்கேற்கவுள்ளார்.
5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பின்னணியில் ராகுல் காந்தி சென்னைக்கு வருவதால் காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். நாளைய நிகழ்ச்சியும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications