நான் ஏன் மோடியைக் கட்டிப்பிடிச்சேன் தெரியுமா.. ராகுல் காந்தி வெளியிட்ட சுவாரஸ்ய விளக்கம்!
Recommended Video

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்திரத்தை குறைக்கவே அவரை கட்டிப்பிடித்தேன் என ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று பிற்பகல் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முன்னதாக அவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட சேஞ்சர்ஸ் மேக்கர்ஸ் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நாடாளுமன்றத்தில் மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மோடியின் இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி அவரை கட்டி பிடித்தார். இதனால் ஸ்டென்னாகி போன மோடி கட்டிப்பிடித்துவிட்டு திரும்பிய ராகுலை அழைத்து தோளில் தட்டி கொடுத்தார்.

மதங்களின் அடிப்படை
இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி மோடியை கட்டி அணைத்தது ஏன் என மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் கூறுகையில் அன்பு செலுத்துவதே மதங்களின் அடிப்படை. அதை வெளிப்படுத்தவே மோடியை கட்டியணைத்தேன்.

அன்பு
அன்பு மூலமாகத்தான் ஆத்திரத்தை குறைக்க முடியும். என் மீது மோடிக்கு அன்பு இல்லாவிட்டாலும் அவர் மீது எனக்கு அன்பு உள்ளது என்பதை காட்டவே கட்டியணைத்தேன்.

விரோதம்
எனது குடும்பத்தை மோடி அவமதித்தே பேசி வருகிறார். இருந்தாலும் நான் அவர் மீது அன்பை காட்டினேன். பிரதமர் மீது எனக்கு விரோதமோ குரோதமோ இல்லை. அன்பு காட்டாதவர்கள் தான் பிறரை பற்றி யோசிக்க மாட்டார்கள்.

தோல்வி
வெறுப்பை காட்டுபவர்களுக்கு அன்பை காட்டுவதே சரியான பதிலாகும். 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததிலும் நன்மை கிடைத்தது.

குணம்
தோல்வி அடைந்ததால்தான் அரசியலை நான் கற்றுக் கொண்டேன். இந்த அரசியலை கற்றுக் கொடுத்ததால்தான் எனக்கு மோடி மீது அன்பு வந்தது. பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மீது யாரும் வெறுப்பது கிடையாது. அன்பின் மூலம் ஆத்திரத்தை அடக்குவது எனது குணம் மட்டுமல்ல, நாட்டின் குணம். குறிப்பாக தமிழர்களின் குணம் ஆகும் என்று ராகுல்காந்தி பேசினார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications