"13450 கோடி.." புது பில்டிங் கட்ட போறீங்களா, மக்களை காக்க போகிறீர்களா..மோடிக்கு ராகுல் கேள்வி
சென்னை: நாடு முழுக்க கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், எதற்கு நிதி ஒதுக்குவது முக்கியம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி.
மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா என்ற ஒரு திட்டத்தை கொண்டு வருகிறதல்லவா.. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது, பிரதமர் இல்லம் அமைப்பது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான பகுதிகளை மறுசீரமைக்கும் பணியை செய்வது என அனைத்துக்குமான பெயர்தான் Central Vista Project. இந்த பிரமாண்ட கட்டுமான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது மத்திய அரசு.


இதை இன்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி. 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகள் செய்யலாம் . அல்லது அந்த பணத்தை கொண்டு 45 கோடி இந்தியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட முடியும், அல்லது ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும், அல்லது குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் கீழ் 2 கோடி இந்திய குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, ஆனால் மக்களின் வாழ்க்கையை விடவும் பிரதமரின் ஈகோ மிகப் பெரியது என்று கூறியுள்ளார்.

அதாவது, பிரதமர் மோடி பிடிவாதமாக சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காகதான் நிதியை செலவு செய்வாரே தவிர, தான் குறிப்பிட்ட மக்கள் நலப் பணிகளுக்கு செய்யமாட்டார். அதற்கு அவரது சுய முனைப்பு இடம் தராது என்பது ராகுல்காந்தி குற்றச்சாட்டாகும்.
முன்னதாக ராகுல் காந்தி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், லாக் டவுன் செய்வதுதான் இப்போது இருப்பதில் ஒரே வாய்ப்பாக இருக்க முடியும். வேறு எதனாலும் வைரஸ் பரவலை தடுக்க முடியாத அளவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. இந்தியாவுக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications