Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் டிக்கெட் எடுக்க யுடிஎஸ் செயலி வச்சிருக்கீங்களா? இதை பார்க்காமல் சீசன் டிக்கெட் எடுக்காதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பதிவு டிக்கெட், முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட், ரயில் எங்கே வருகிறது என்பதை அறிந்து கொள்ளும் வசதி என ரயில்களின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக ரயில் ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி தற்போது பயணிகள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் நிலையில் விரைவில், யுடிஎஸ் செயலி பயன்பாட்டை நிறுத்த ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரயில்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை புக் செய்ய யுடிஎஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ரயில்களில் புறநகர் மின்சார ரயில் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளையும் பயணிகள் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.

railways-may-phase-out-uts-app-as-railone-gains-popularity

ரயில்வே யுடிஎஸ் செயலி

ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் போய் காத்துக்கிடந்து டிக்கெட் எடுத்து முடிப்பதற்குள் சில நேரங்களில் ரயில்களை மிஸ் செய்யும் நிகழ்வும் நடைபெறுகிறது. அதுபோன்ற நேரங்களில் பயணிகளுக்கு யுடிஎஸ் டிக்கெட் செயலி பெரும் வரப்பிரசாதம் போல அமைந்தது.

யுடிஎஸ் செயலியை பயன்படுத்தி ஆரம்பத்தில் ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் இருந்து மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. பிறகு பயணிகள் நலன் கருதி இந்த தூர வரம்பு அதிகரிக்கப்பட்டது. அதேபோல, ரயில் நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்து மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. யுடிஎஸ் செயலியை பயணிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க பயணிகளுக்கு கட்டண சலுகையும் ரயில்வே அறிவித்து இருந்தது.

ரயில் ஒன் செயலி அறிமுகம்

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ரயில்வே ரயில் ஒன் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலியில் ரயில்களுக்கான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அனைத்து ஆப்ஷன்களும் உள்ளன. அதாவது முன்பதிவு டிக்கெட், முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட், ரயில் எங்கே வருகிறது என்பதை அறிந்து கொள்ளும் வசதி என ரயில்களின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக ரயில் ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும்

இந்த செயலி தற்போது பயணிகள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் நிலையில் விரைவில், யுடிஎஸ் செயலி பயன்பாட்டை நிறுத்த ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்த செயலி நிறுத்தப்படலாம் என்றும் இது தொடர்பாக ரயில்வே பெயரில் உள்ள சுற்றறிக்கையும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யுடிஎஸ் செயலி நிறுத்தம் செய்யப்படலாம் என்று வெளியாகியிருக்கும் தகவல் பயணிகளை கவலை அடைய வைத்துள்ளது. யுடிஎஸ் செயலியில் பலரும் தங்கள் சீசன் டிக்கெட்டுகளை எடுத்து வைத்து இருக்கும் நிலையில், இந்த செயலி நிறுத்தப்பட்டால் தங்கள் டிக்கெட் என்னவாகும் என்ற அச்சமும் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

புதிதாக புக் செய்ய முடியவில்லை

இதற்கிடையே, யுடிஎஸ் செயலியில் சீசன் டிக்கெட்டுகளை புதிதாக புக் செய்ய முடியவில்லை என்று மும்பை பயணிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றாலும் யுடிஎஸ் செயலி செயல்பாட்டை நிறுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ரயில் ஒன் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்கும் வசதி இருப்பதால், யுடிஎஸ் செயலி படிப்படியாக நிறுத்தப்பட்டு விடும் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+