எல்லா வந்தே பாரத் ரயிலும் ஒரே மாதிரி தெரிந்தாலும்.. ஒரு வித்தியாசம் இருக்குது.. ஓ! இதுதான் காரணமா?
சென்னை: திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயிலில் முந்தைய ரயில்களை போல் அல்லாமல் இதன் லோகோ முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இந்த மாறுதல் ஏன் என்பது குறித்த விவரங்ககளை இங்கே பார்க்கலாம்.
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தி நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக ராஜ்தானி, சதாப்தி போன்ற சொகுசு ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு, நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதுடெல்லி- வாரணாசி இடையே பிரதமர் மோடி துவங்கி வைத்த இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பிறகு நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நாடு முழுவதும் அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. பிற ரயில்கள் போல் அல்லாமல் வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்தே இருக்கும்.
வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என மேம்படுத்தப்பட்ட பல வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வழித்தடத்திலும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், கேரள மாநிலத்திற்கு முதல் வந்தே பாரத் ரயிலாக
இந்த நிலையில், கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயிலில் லோகோ வித்தியாசமாக இருந்தது பயணிகள் மத்தியில் கவனம் பெற்றது. அதாவது திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயிலின் முன்புறத்தில் சீட்டா லோகோ இடம் பெற்றிருந்தது.
பிற வந்தே பாரத் ரயில்களை போல வசதிகள்தான் இந்த ரயிலில் இருந்தாலும் லோகோ மட்டும் மாறுபட்டு இருப்பது பற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், " இது ஒரு மேம்படுத்துதலுக்கான நடைமுறை என்றும் காலப்போக்கில் முன்னேற்றத்திற்காக லோகவில் சிறு வித்தியாசம் காட்டப்படுகிறது" என்றும் கூறினார்.

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை துவக்க காலத்தில் விடப்பட்ட ரயில்களில் சென்னையில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) குறிக்கும் வகையில் ஐசிஎப் லோகோ இடம் பெற்றிருந்தது. அதன்பிறகு வந்தே பாரத் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த லோகோவாக மாற்றம் செய்யப்பட்டது. பிறகு இந்தியில் வந்தே பாரத் என ரயிலின் முன் எழுதப்பட்டு இருக்கும் வகையில் லோகோ மாறியிருந்தது. தற்போது, சீட்டா லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications