Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லா வந்தே பாரத் ரயிலும் ஒரே மாதிரி தெரிந்தாலும்.. ஒரு வித்தியாசம் இருக்குது.. ஓ! இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயிலில் முந்தைய ரயில்களை போல் அல்லாமல் இதன் லோகோ முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இந்த மாறுதல் ஏன் என்பது குறித்த விவரங்ககளை இங்கே பார்க்கலாம்.

இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தி நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக ராஜ்தானி, சதாப்தி போன்ற சொகுசு ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

Railways used four different logos for the Vande Bharat Express so far-Why they have different Logos

கடந்த 2019 ஆம் ஆண்டு, நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதுடெல்லி- வாரணாசி இடையே பிரதமர் மோடி துவங்கி வைத்த இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பிறகு நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நாடு முழுவதும் அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. பிற ரயில்கள் போல் அல்லாமல் வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்தே இருக்கும்.

வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என மேம்படுத்தப்பட்ட பல வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வழித்தடத்திலும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல், கேரள மாநிலத்திற்கு முதல் வந்தே பாரத் ரயிலாக

இந்த நிலையில், கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயிலில் லோகோ வித்தியாசமாக இருந்தது பயணிகள் மத்தியில் கவனம் பெற்றது. அதாவது திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான வந்தே பாரத் ரயிலின் முன்புறத்தில் சீட்டா லோகோ இடம் பெற்றிருந்தது.

பிற வந்தே பாரத் ரயில்களை போல வசதிகள்தான் இந்த ரயிலில் இருந்தாலும் லோகோ மட்டும் மாறுபட்டு இருப்பது பற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், " இது ஒரு மேம்படுத்துதலுக்கான நடைமுறை என்றும் காலப்போக்கில் முன்னேற்றத்திற்காக லோகவில் சிறு வித்தியாசம் காட்டப்படுகிறது" என்றும் கூறினார்.

Railways used four different logos for the Vande Bharat Express so far-Why they have different Logos

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை துவக்க காலத்தில் விடப்பட்ட ரயில்களில் சென்னையில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) குறிக்கும் வகையில் ஐசிஎப் லோகோ இடம் பெற்றிருந்தது. அதன்பிறகு வந்தே பாரத் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த லோகோவாக மாற்றம் செய்யப்பட்டது. பிறகு இந்தியில் வந்தே பாரத் என ரயிலின் முன் எழுதப்பட்டு இருக்கும் வகையில் லோகோ மாறியிருந்தது. தற்போது, சீட்டா லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+