யாஸ் புயல் உருவாகும் முன்பே.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. 2வது நாளாக சூறை காற்றுடன் பெய்தது
சென்னை: சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய இந்த கனமழை காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளுமையான வானிலை நிலவுகிறது.
Recommended Video
சென்னை, ஆதம்பாக்கம், பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், ஆவடி , வளசரவாக்கம், வானகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
பிற்பகல் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.

வட உள் மாவட்டங்கள்
சென்னை மட்டுமில்லாமல் , காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்கள் பலவற்றிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மைய வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். வடக்கு அந்தமான், கிழக்கு மத்திய வங்க கடல் பகுதிகளில், இன்று அல்லது நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி அடுத்த 72 மணி நேரத்தில் அது புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

யாஸ் புயல்
கடலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களின் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. அது வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, 26ம் தேதி மாலையிலோ அல்லது 27ம் தேதி அதிகாலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம்
இந்த புயலால் தமிழகத்துக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா . வெப்பச்சலனம் காரணமாக வெள்ளிக்கிழமையான இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், நேற்று தெரிவித்திருந்தார்.

நல்ல மழை பெய்யும்
புயல் வலுவடைந்த பிறகு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முன்னோட்டம் தான் இன்று சென்னையில் பெய்யும் மழை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications