தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை வெளுக்கும்.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் 3 மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பிச்சு எடுத்தது.
முக்கியமாக மதுரையில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வந்தது. இதனால் மதுரையில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.
மதுரை பேருந்து நிலையம் முழுக்க நீர் தேங்கியதும் குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டங்கள் பலவற்றில் கடந்த சனிக்கிழமையில் இருந்தே விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்தது.

ரெட் அலர்ட்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் 3 மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் அதி தீவிர கனமழை பெய்யும். இந்த 3 மாவட்டங்களில் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை
கன்னியாகுமரியில் ஏற்கனவே கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இங்கு விட்டு விட்டு கனமழை பெய்யும். மாலை நேரத்திற்கு பின் மழை தீவிரமாக பெய்ய வாய்ப்பு உள்ளது.

மற்ற மாவட்டங்கள்
தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடல் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. இங்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும்.
Recommended Video

காற்று
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்திற்கு பின் சென்னையில் சாரல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. காரைக்கால், புதுச்சேரியிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications