தமிழகத்தில் பரவலாக மழை.. 3 நாட்களுக்கு தொடரும்.. வானிலை மையம்
Recommended Video

சென்னை: வட தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் உள்பகுதிகளில் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால் மற்றும் தரங்கம்பாடியில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை, செம்பரம்பாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். வட தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும். மீனவர்கள், தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications