ஆர்.என்.ரவி வெளியேறியது ஏன்?ஆளுநர் உரையின்போது மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது! ராஜ்பவன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையாற்றவிடவில்லை என்றும் அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும் அதனால்தான் ரவி வெளியேறினார் என்றும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

ஆளுநர் வாசிக்கப்பட வேண்டிய உரையில் ஆதாரமற்ற ஆற்றுகள் இருந்தன. பட்டியலின மற்றும் பெண்களுக்கு எதிரான அராஜகங்களும் இந்த உரையில் இடம் பெறவில்லை. மேலும் உரையில் தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. மக்களை பாதிக்கும் பல முக்கிய பிரச்சினைகள் உரையில் விடுபட்டிருந்தன. பெண்களின் பாதுகாப்பு தொடர்பானவை உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
Reasons why Governor declined reading the Govt speech in the Assembly:
— LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) January 20, 2026
1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak;
2- The speech contains numerous unsubstantiated claims and misleading statements. Several crucial issues troubling the people… pic.twitter.com/EebC7wDJHg
ஆளுநர் மாளிகை தனது சமூகவலைதள பக்கத்தில் ஆளுநர் வெளியேறியதற்கான 13 காரணங்களை குறிப்பிட்டுள்ளது. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் உரையை ஆளுநர் படிக்காததற்கான காரணங்கள்:
- ஆளுநர் உரையின் போது அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரை பேசவிடவில்லை.
- சட்டமன்றத்தில் அரசு தயாரித்த உரை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், தவறான தகவல்களையும் கொண்டிருக்கிறது. மக்களின் நாளாந்த வாழ்க்கையைப் பாதிக்கும் பல முக்கியமான பிரச்சனைகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
- மாநிலம் ரூபாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது. பல ஒப்பந்தங்கள் வெறும் காகிதத்தில்தான் இருக்கிறது. உண்மையான முதலீடு இதில் ஒரு சிறிய பகுதிதான். அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் மாநிலங்களில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது ஆறாவது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது என்பது முதலீட்டுத் தரவுகள் வெளிப்படுத்தும் உண்மை.
- பெண்கள் பாதுகாப்பு என்பது அப்பட்டமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் வகையில் போக்சோ வழக்குகளில் 55% அதிகரிப்பையும், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்களில் 33% அதிகரிப்பையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இத்தகைய தீவிரமான சவால்கள் ஆளுநர் உரையில் கண்டுகொள்ளப்படவில்லை.
- போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மாநிலம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. ஒரு வருடத்தில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையால் தற்கொலை செய்துகொண்டனர். இது நம் எதிர்காலத்தை அச்சுறுத்தும் ஒரு தீவிரமான பிரச்சனையாகும், ஆனால் இதுவும் உரையில் சாதாரணமாகக் கடந்து செல்லப்பட்டுள்ளது.
- தலித்துகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும், தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகின்றன. இந்த முக்கியமான சமூகப் பிரச்சனையும் அரசு உரையில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற வன்முறைகள் ஒரு வளர்ந்த சமூகத்திற்குப் பெரும் இழுக்காகும்.
- மாநிலத்தில் ஒரு வருடத்தில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது தினமும் ஏறக்குறைய 65 தற்கொலைகள் என்ற அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையாகும். நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இவ்வளவு கவலைக்கிடமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் 'தற்கொலை தலைநகரம்' என்று குறிப்பிடப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ள போதும், இது அரசுக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. இதுவும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தரத்தில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதுடன், கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடுகள் காணப்படுகின்றன. இது நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கிறது. 50%க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாக உள்ளன. கவுரவ விரிவுரையாளர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இது அரசுக்குக் கவலையளிக்காத விஷயமாகவே கருதப்பட்டு, முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
- ஆயிரக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடத்தப்படாததால், அவை செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இந்தப் பஞ்சாயத்துகள் அரசின் சிறப்பு அலுவலர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் தங்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளை இழந்துள்ளனர். இது அரசியலமைப்பின் அடிப்படையான கோட்பாடுகளுக்கு எதிரானது. கிராமப் பஞ்சாயத்துகள் மீண்டும் செயல்பட மக்கள் ஆவலுடன் காத்திருந்தபோதும், இது உரையில் குறிப்பிடப்படவில்லை.
- மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் அறங்காவலர்கள் இன்றி, மாநில அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ளன. கோடிக்கணக்கான பக்தர்கள் கோயில்களின் நிர்வாகச் சீர்கேடு கண்டு மிகுந்த வேதனையிலும், ஏமாற்றத்திலும் ஆழ்ந்துள்ளனர். பழங்காலக் கோயில்களை மீட்டெடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவுகள் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அலட்சியமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
- குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME) தொழில் நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுகமான செலவுகளால் பெரும் அழுத்தத்தில் உள்ளன. இவை நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும். ஆனால், நாட்டில் 55 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 4 மில்லியன் மட்டுமே உள்ளன. மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தும் இந்த நிலை. தமிழக தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டியுள்ளது. இந்த முக்கியமான பிரச்சனையும் ஆளுநர் உரையில் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
- கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் கீழ்நிலை ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் மன அமைதியின்மையிலும், விரக்தியிலும் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகள் பற்றி ஆளுநர் உரையில் எந்தக் குறிப்பும் இல்லை.
- தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டு, அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications