Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்லைன் வகுப்பில்.. மாணவிகளை வீடியோ எடுத்து ஜூம் செய்து.. ரசித்த "காம" கோபாலன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் வகுப்பிற்கு வரும் மாணவிகளை வீடியோ எடுத்து அவர்களது அங்கங்களை ஜூம் செய்து அதை சேவ் செய்து வைத்துக் கொண்டு விரும்பும் நேரங்களில் பார்ப்பேன் என பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Recommended Video

    Mark-ஐ மைய்யமாக வைத்து Black Mail பண்றாங்க - Thamizharasi Sivakumar

    இந்த வாக்குமூலங்களை பார்க்கும் போது பகீரென உள்ளது. இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என நினைக்க தோன்றுகிறது. இது போன்று குழந்தைகளை காமக்கண்களுடன் பார்ப்போருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

    பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் (59), இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    போலீஸ் காவல்

    போலீஸ் காவல்

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த 3 நாட்களுக்கு போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்து ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் அவரிடம் 250 கேள்விகளை எழுப்பப்பட்டன. இந்த கேள்விகளில் இந்த பாலியல் சீண்டல் விவகாரத்தில் வேறு எந்தெந்த ஆசிரியர்களுக்கு தொடர்புள்ளது?

    தொல்லை

    தொல்லை

    ராஜகோபாலனை தவிர வேறு யாரேனும் மாணவிகளுக்கு இது போன்ற தொல்லை கொடுத்தனரா, பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே இது நடந்ததா, மாணவர்களுக்கான வாட்ஸ் ஆப் குழுவில் மனநிலை சரியாக இருக்கும் ராஜகோபாலன் ஆபாசமாக வந்தது ஏன், மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது ஏன்?

    சினிமா ஆசை

    சினிமா ஆசை

    மாணவிகளுக்கு சினிமா ஆசை காட்டி வேறு எந்த மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டார்? இது போன்ற ஏராளமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை ஜூம் செய்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதை அவ்வப்போது பார்த்து ரசித்ததாக தெரிவித்தார்.

    ஆஜர்

    ஆஜர்

    மேலும் அவரிடம் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும் பதிவு செய்து ஒவ்வொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு காலை 11 மணி அளவில் ஆசிரியர் ராஜகோபாலன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+