பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ்தாஸுக்கு முக்கியப் பதவி... சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம்..!
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1989-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர் பல மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சென்னை புறநகர் காவல் ஆணையர், கடலோர காவல்படை இயக்குநர், தென் மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை இதற்கு முன் ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ். வகித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் அமலாக்கத்துறையில் ஏ.டி.ஜி.பி.யாக இவர் பணியாற்றியிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தேவர் குருபூஜையின் போது ஏற்பட்ட மோதல், பரமக்குடி கலவரம், முல்லைப்பெரியாறு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளித்தவர் இவர். மேலும், கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிஸம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தென் மண்டல ஐ.ஜியாக இருந்த போது துணிச்சலுடன் ஒடுக்கியவர் ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ராஜேஷ்தாஸ் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தலை நடைபெறவுள்ள நிலையில் இவரது நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேர்தலின் போது சட்டம் ஒழுங்கை பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து பரப்புரை மேற்கொள்ளாத வகையில் ராஜேஷ்குமார் ஐ.பி.எஸ். செயல்படுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு இந்தப் பதவி தரப்பட்டுள்ளது. இதனிடையே இவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.ஸின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications