எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்!
Recommended Video

சென்னை: ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நன்றாகவே தெரியும். அட வரலாறு தெரியலன்னா கூட கடந்த 2 நாட்களாக தினசரி செய்தித்தாள் படிச்சிருந்தாலாவது யார் இந்த 7 பேர் என்ற விஷயம் தெரிந்திருக்கும்.
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு 2016ம் ஆண்டு அனுப்பப்பட்டது. அந்த மனுவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பவே இல்லை என்ற உண்மை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது.
[அப்படின்னா அப்படித்தானாம்.. பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணியை நக்கலடித்த ரஜினிகாந்த்! ]

அரசியல் பகடைக்காய்கள்
முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த 7 பேரின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தமிழக அரசியலில் தொடர்ந்து பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது 7 பேரின் விடுதலை விவகாரம்.

எனக்கு தெரியாதே
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த 7 பேர் என்று கேட்டிருக்கிறார். ராஜீவ் கொலை குற்றவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரைவிடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையே அது பற்றிய உங்களது கருத்து என்று கேட்டதற்கு நான் இப்போது தான் வருகிறேன் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.

அதான் சொன்னேன்ல தெரியாதுன்னு
மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர் மீண்டும் இது பற்றி இன்னொரு செய்தியாளர் கேட்டார். அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கோபத்தை காட்டினார் ரஜினி.

இது சரியா ரஜினி சார்
7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தெரியாது என்று சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், எந்த 7 பேர் விவகாரம் என்று கேட்டதை தான் எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.

தலைவருக்கு அழகா
தமிழகத்தில் சிறு பிள்ளைக்குக் கூட தெரியும் 7 பேர் விடுதலை என்றால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களைத் தான் சொல்கிறார்கள் என்று. ஆனால் தமிழகத்தில் நல்ல தலைவர் இல்லை, தலைவருக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் ரஜினி இதைத் தெரியாது என்று சொல்கிறாரே. அரசியல் தலைவராக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் ரஜினிக்கு அது தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை, தமிழகத்தின் முதலமைச்சராக வர நினைப்பவர் இப்படி இருந்தால் எதிர்காலத்தில் இது யாருக்கு ஆபத்தாக இருக்கும்.
-
சுந்தர் சி யின் மாஸ்டர் பிளான்.. ரஜினி படத்தில் இருந்து விலக காரணம் இதுவா? அரசியலில் எதிரெதிர் துருவம்! பின்னணி -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications