“ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடாது..” ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி!
சென்னை: திமுக மிரட்டல் காரணமாகத்தான், ரஜினி அரசியலுக்குள் வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினியை மிரட்டியது திமுகதான் என்று கூறியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?
அவர் பேசியதாவது, "எம்ஜிஆருக்கு பின்னர், ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியவர்தான் ரஜினி. தமிழக அரசியல் களத்திற்கு வந்து, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது.
மாற்றம் வேண்டும்
அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கரூர் சம்பவத்துக்குப் பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என விஜய் பயணிக்கிறார்" என்று பேசியிருந்தார்.
வாய்ப்பே இல்லை
இதற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்திருக்கிறார். "இது ஆதாரமில்லாத கருத்து. அவர் எந்த அடிப்படையில் இதை சொல்லியிருக்கிறார் என தெரியவில்லை. ரஜினிகாந்த், பதவி, அதிகாரம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர் அல்ல. அவர் அந்த நிலையிலிருந்து முற்றிலும் விலகி நிற்பவர். முதிர்ச்சியடைந்தவர். எனவே, அவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சி தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை" என்று கூறியிருக்கிறார்.
மிரட்டலுக்கு அஞ்சி கிடையாது
முன்னதாக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியாகியிருந்தது. அதில், "ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல: தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.
உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும். பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர். #பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி" என விமர்சிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications