பதவிக்கு தக்கபடி பேசுங்கள்.. நான் திருப்பி கேட்டால் என்ன ஆகும்.. அமைச்சர் மீது சீறிய ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை: பதவிக்கு தக்கபடி மரியாதையோடு பேச வேண்டும் என்று, அமைச்சர் ஜெயக்குமாருக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை, போயஸ் இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது, அவர் 7 தமிழர் விடுதலை மற்றும் பாஜக குறித்த தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
நேற்று தனது பிரஸ் மீட்டால் சர்ச்சை எழுந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கவே, இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார் ரஜினிகாந்த்.
[இன்னும் முழுசா அரசியல்ல ஈடுபடல.. எல்லாம் வீட்டுக்கு போங்க.. மறுபடியும் முதல்ல இருந்தா ரஜினி?]

ஜெயலலிதா இல்லாததால்
அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம், ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டனர். இந்த கேள்வியை கேட்டதும், ரஜினிகாந்த் உள்ளுக்குள் கோபமடைந்துவிட்டார். கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ஜெயக்குமாரை சாடினார்.

புண்படுத்த கூடாது
ரஜினி கூறியதாவது: அவர் நல்ல பதவியில் உள்ளார். பேசும்போது யாரையும் புண்படுத்தாமல் கருத்தை சொன்னால் நல்லது. அதே கருத்தை நான் கேட்டால்.. ஜெயலலிதா இருக்கும்போது என்று பதிலுக்கு நானும் கேட்டால்.. பதவிக்கு மரியதை கொடுத்து பேசினால் நல்லது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சர்கார் விவகாரம்
சர்கார் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட கூடாது என்று கருத்து கூறினீர்கள். ஆனால் அதிமுகவினர் போராட்டத்தால், சர்கார் படம் மறு தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

வன்மையாக கண்டிக்கிறேன்
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், சர்கார் மறுதணிக்கை செய்யப்படும் அளவுக்கு சென்றதை, கடுமையாக கண்டிக்கிறேன். அது வன்முறை. எந்த ரூபத்தில் வந்தாலும், வன்முறையை ஏற்க முடியாது என்றார்.

சர்க்கார் பார்க்கும்
2.O திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் போன்றோர் அறிவித்துள்ளார்களே என்ற கேள்விக்கு, அதை கர்நாடகா சர்க்கார் பார்த்துக்கும் என்று பதிலளித்து பிரஸ் மீட்டை முடித்துக்கொண்டார் ரஜினிகாந்த்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு











Click it and Unblock the Notifications