டெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்
சென்னை: மதத்தை வைத்து அரசியல் செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. டெல்லி வன்முறையை அடக்க முடியாவிட்டால் மத்திய அரசு பதவியை விட்டு போய் விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லி கலவரத்தால் நாடே அதிர்ந்து போயுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று அடுத்தடுத்து வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றமும் டெல்லி காவல்துறையை கடுமையாக சாடி வெளுத்தெடுத்து விட்டன.

டெல்லி கலவரத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். கோர்ட்டுகளின் கடும் விளாசலைத் தொடர்ந்து தற்போது கலவரக்காரர்களை தேடி பிடித்து கைது செய்ய ஆரம்பித்துள்ளது டெல்லி போலீஸ்.
இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக போயிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சென்னை திரும்பினார். அவரிடம் செய்தியாளர்கள் டெல்லி கலவரம் தொடர்பாக சரமாரியான கேள்விகளைக் கேட்டனர். அப்போது ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். நான் முன்பே அதை்ததான் கூறியிருந்தேன். சிலபேர், சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சமயத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்துறை அமைச்சகம் தவறியுள்ளது. இது உளவுத்துறையின் தோல்வி, உள்துறையின் தோல்வி. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமிய சமூகத்தினர் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நாளாக இருப்பேன்.
என்ஆர்சி குறித்து மத்திய அரசு விளக்கி விட்டது. அதில் குழப்பமே இல்லை. ஆனால் மத்திய அரசு குடியுரிமை திருத்த சடத்தை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதைச் சொல்வதால் உடனே நான் பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள்.
என்னை பாஜக ஆள் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுவது வேதனை அடையச் செய்கிறது. நான் எனது மனதுக்கு பட்ட உண்மையைத்தான் சொல்கிறேன்.
டெல்லி கலவரத்தை தடுப்பதில் மத்திய உள்துறை தோல்வி அடைந்துள்ளது. அமைதி வழியில் போராடலாம்.. அது வன்முறையாக மாற இடம் தரக் கூடாது. இப்போது டூமச்சாக போய் கொண்டிருக்கிறது, டெல்லி கலவரத்தை மத்திய அரசு அடக்க வேண்டும்.அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டியதுதான், அவ்வளவுதான்" இவ்வாறு கூறினார்.
-
நீதான்யா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்.. இந்த நேரத்தில் இப்படியா! ஆதவ் அர்ஜுனாவால் நொந்துபோன விஜய் -
"தேரை இழுத்து தெருவில் விட்றாதீங்க"! விஜய்யால் சைலன்ட்டான ஆதவ்? பிரஸ் மீட் ரத்துக்கு பின்னணி என்ன? -
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
கடிவாளம் போடாமல் ஆடவிட்ட விஜய்.. ரஜினிகாந்த் வைத்த ஆப்பு.. சிக்கலில் கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா! -
"ரஜினிகாந்த் அறிக்கைக்கு பதில்"! தவெக பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா! -
மன்னிப்பு கோரிய ஆதவ் அர்ஜுனா.. மகிழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் டீம்.. உச்சத்தில் தவெக கோஷ்டி பூசல்! -
ஆதவ் வாயை கட்டுங்க விஜய் இல்லன்னா பிரச்சனை..! எச்சரிக்கை விடுத்த ப்ளூ சட்டை மாறன்.. ரஜினி சர்ச்சையில் புதிய திருப்பம் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
Rajinikanth: அன்று காக்கா- கழுகு கதையால் விஜய்யை விமர்சித்த ரஜினி! நடந்தது என்ன? வைரலாகும் பழைய கதை! -
ரஜினி பயந்தாங்கோளி கிடையாது.. ஆதவ் அர்ஜுனா விளக்கம் தரணும்.. தவெக மேடையிலே கிளம்பிய எதிர்ப்பு -
ரஜினிகாந்த் ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டாங்க.. ஆதவ் அர்ஜுனா உடனே மன்னிப்பு கேட்கனும்.. நயினார் டென்ஷன் -
ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியே கிடையாது.. விஜய் வெளிச்சத்தில் ஒட்டி இருக்கிறார்.. சாடிய இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications