ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது!

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கும் முறையில் பெரிய மாற்றத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசியல் செல்வாக்கோ, பணப் பலமோ அல்ல... தகுதியே ஒரே அளவுகோல் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்திருப்பது, கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மையை பிரதானமாக பார்க்கப்படுகிறது.48 தனியார் பள்ளிகளுக்கு புதிய அங்கீகாரக் கடிதங்களை அமைச்சர் ஏ.ராஜ்மோகன் வழங்கினார்.

rajmohan Tamilnadu TVK school Tamil Nadu private school approval Education Minister Rajmohan private school NOC Tamil Nadu Tamil Nadu school recognition private school renewal certificate Tamil Nadu education department school approval online process no political influence school approval Tamil Nadu private school fees school recognition July 2026 2026

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளுக்கான புதுப்பித்தல் மற்றும் தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கும் நடைமுறை சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதேநேரத்தில், இனிமேல் இந்த செயல்முறை முழுவதும் வெளிப்படையாக நடைபெறுவதற்காக ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

அரசியல் பலம், பண பலத்திற்கு இனி வேலையில்லை

தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ்கள் வழங்கும் போது இனி எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தற்போதைய ஆளும் கட்சியான தவெகவாக இருந்தாலும் சரி, பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருடைய பரிந்துரையோ அல்லது அழுத்தமோ மதிக்கப்படாது என்றும், பள்ளிகளின் தகுதி மற்றும் அடிப்படை வசதிகள் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பள்ளிகளுக்குச் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது தேவையான கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கல்வி தொடர்பான விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இணையவழி விண்ணப்பம்

வரும் ஜூலை 1 முதல் தனியார் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணையவழி மூலம் பெறும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது.

புதுப்பித்தல் சான்றிதழ், தொடர்ச்சியான அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமே ஏற்கப்படும். இதன் மூலம் தனிநபர் தலையீடு குறைக்கப்பட்டு, செயல்முறை வேகமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை நம்புகிறது.

1 ரூபாய் கூட வேண்டாம்

இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கியமான எச்சரிக்கை கவனம் பெற்றுள்ளது.

தனியார் பள்ளிகள் அங்கீகாரம் அல்லது புதுப்பித்தல் சான்றிதழ் பெறுவதற்காக யாருக்கும் ஒரு ரூபாய் கூட வழங்க வேண்டியதில்லை என்று அவர் கூறினார். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கல்வித் தரகர்கள் அல்லது வேறு யாரேனும் பணம் கேட்டு அணுகினாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த புதிய நடைமுறையின் மூலம் சான்றிதழ் வழங்கும் செயல்முறை மூலம் இடைத்தரகர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதேவேளையில் அரசு வெளிப்படையான முறையை கொண்டு வருவதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகளும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், பள்ளிக் கட்டண விவரங்களை தகவல் பலகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+