தேசிய நினைவு சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்பட வேண்டும்.. மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் கருத்து!
சென்னை: ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் , உலக பாரம்பரிய சின்னம் என்ற பட்டியலில் ராமர் பாலம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் .
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அதில் விருப்பம் இருக்கிறது. அது மட்டும் கிடையாது உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் ராமர் பாலம் சேர்க்கப்பட வேண்டும்.

ஏற்கனவே ராமர் பாலம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராமர் பாலம் என்பது தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளுக்கு இடையே கடல் பகுதிக்குள் இருக்கக்கூடிய ஒரு திட்டு போன்ற பகுதியாகும். ராமாயணத்தில் ராமர் வானரப் படைகளின் உதவியோடு இலங்கை சென்றதாக தகவல் இடம் பெற்றுள்ளது. அப்போது ராமருக்கு வானரங்கள் கல் எடுத்து கொடுத்து உதவி செய்து கடலுக்குள் பாலம் அமைக்கப்பட்டதாக ராமாயணம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போதைய செயற்கைக்கோள் ஆய்வு முடிவுகளும் அந்த பகுதியில் திட்டு போன்ற அமைப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தி அந்த வழியாக கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் முயற்சிகள் செய்யப்பட்டன.
அப்படி செய்தால் ராமர் பாலம் சேதம் அடைந்து விடும் என்று கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன . இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் பிரகலாத், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி அறிவிக்கும் பட்சத்தில், ராமர் பாலத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு கிடைக்கும். இதனால், சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications