தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் களைகட்டிய ரம்ஜான் கொண்டாட்டம்.. புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை
சென்னை: ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர்.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. அதாவது இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலானில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை உணவு உண்பதை நிறுத்தி விரதம் இருப்பார்கள்.

இந்த காலக்கட்டத்தில் நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு மாலை நேரத்தில் இப்தார் விருந்துடன் உணவு எடுத்து கொள்வார்கள். இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
பொதுவாக ரம்ஜான் பண்டிகை என்பது வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இதனால் பல இடங்களில் ரம்ஜான் பண்டிகையின் தேதி என்பது மாறுபடும். இந்நிலையில் தான் தமிழகத்தில் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகைக்கான பிறை பார்க்கப்பட்டது. அப்போது பிறை தெரியவில்லை.
இதையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் அறிவித்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை களைகட்டி உள்ளது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் பல்லாயிரணக்காண இஸ்லாமியர்கள் பங்கேற்று வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, கடையநல்லூர், அச்சன்புதூர் உள்பட பல இடங்களில் ரம்ஜான் பண்டிகை களைகட்டி உள்ளது.
அதோடு டெல்லி உள்பட நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடி கூட்டாக சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேற்று தமிழ்நாட்டில் சில இடங்களில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நேற்று முன்தினம் பிறை தெரிந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்றும் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இன்று 2 நாளாக தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications