பிறை தெரிந்தது.. ரமலான் தொடங்கியது.. இன்று முதல் தமிழ்நாட்டில் ஆரம்பமாகிறது நோன்பு.. பிரதமர் வாழ்த்து
சென்னை: பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்திருக்கும் நிலையில், இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்பட்டுள்ளது.
ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள், ஒரு மாத காலத்துக்கு நோன்பு இருப்பது மரபாகும்.. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள், சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு, மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பினை கடைப்பிடிப்பார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும், பிறை தெரிவதற்கு ஏற்பவே ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்படும். அந்தவகையில், சவூதி அரேபியாவில் நேற்றுமுன்தினம் ரமலான் பிறை தென்பட்டது..
ரமலான் நோன்பு: இதன்காரணமாக, நேற்றைய தினம் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு ஆரம்பமாகிவிட்டது.. அதுபோலவே, தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக, தமிழக அரசு தலைமை ஹாஜி நேற்று மாலை அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவைகளை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றி கொள்ளுமாறு இஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
வாழ்த்துக்கள்: இந்நிலையில், புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: "அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பை கொண்டு வரட்டும் என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications