Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டையை பிளக்கும் வெயில்.. இது நியாயமா அமைச்சரே? பள்ளி மாணவர்களுக்காக பொங்கிய ராமதாஸ் - என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள், சிறுவர்கள், முதியோர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடப்பட்டு இருக்கும் கோடை விடுமுறை காலம் இன்னும் ஓரு வாரத்தில் முடிவடைய உள்ளது.

Ramadass demand govt to extend summer holiday due to hot weather

இந்த நிலையில் முந்தைய ஆண்டுகளை போல் இந்த ஆண்டுகள் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்கள் இதை கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஜுன் 1 ஆம் தேதி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பை தாமதப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார்.

கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1 ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன.

அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 2வது வாரத்திற்குப் பிறகு தான் திறக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து ஜுன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும்.

Ramadass demand govt to extend summer holiday due to hot weather

கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்." என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+