எல்லாம் 7+1 செய்த மாயம்.. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரிக்கும்.. பாமக விளக்கம்
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரவு தெரிவிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸும், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதன் பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்கள் கூறுகையில் மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமைகளாகும். இதை அடிப்படையாக கொண்டே நன்கு ஆராய்ந்து தேர்தல் அறிக்கையை வடிவமைத்துள்ளோம்.
எம்எல்ஏ, எம்பி பதவியை வகித்த அனுபவம் கொண்டவர்கள் இந்திய கம்யூ. வேட்பாளர்கள்
40-க்கு 40
இது சம்பிரதாயத்துக்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை அல்ல. தமிழக மக்களின் தன்னாட்சி உரிமைக்குரல். தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் குரலாகவும் எதிரொலிக்கும். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
தொகுதி பங்கீடு
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவற்றை நிறைவேற்ற நாங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். புதிய இந்தியா, புதிய தமிழகத்தை படைப்போம். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்தோம். தேர்தலை பற்றியோ அரசியல் பற்றியோ பேசவில்லை. தொகுதி பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டது.
நிச்சயம்
எனவே தொகுதி பங்கீட்டில் இழுபறிக்காக நாங்கள் விஜயகாந்தை சந்தித்தோம் என கூறுவது தவறாகும். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேம்டும்.
பழைய விஷயங்கள்
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான கோரிக்கையை பாமக நிச்சயமாக ஆதரிக்கும். பழைய விஷயங்களை பேசினால் யாரும் எந்த கூட்டணியிலும் இடம் பெற முடியாது. எங்கள் தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.