தமிழ் மாதம் இல்லை.. அரசின் இலச்சினையும் இல்லை.. இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை- ராமதாஸ்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு அரசின் இலச்சினையும் இல்லாத ஒரு அழைப்பிதழை இதுவரை இந்த தமிழ்நாடு கண்டதில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வு விலக்கு மசோதாவில் தொடங்கி எழுவர் விடுதலை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா என மோதல் போக்கு நீண்டு கொண்டே போகிறது.
ஆளுநரை விமர்சித்து முரசொலியில் அதிகளவில் தலையங்கமும் எழுதப்பட்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஆண்டின் முதல், தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் மாளிகை
இதனிடையே ஆளுநர் மாளிகையில் நடந்த காசி தமிழ் சங்கமம் விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே சரி என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் உரையை புறக்கணிக்கக் கூடும் என எதிர்பார்த்தது.

திமுக கூட்டணி கட்சி
இந்த நிலையில் ஆளுநர் உரை கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. அப்போது திமுக கூட்டணி கட்சியினர் "தமிழகம்" என்ற விவகாரத்தை கையில் எடுத்தனர். எங்கள் நாடு தமிழ்நாடு என முழங்கினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரை
இந்த நிலையில் தமிழக அரசு தயாரித்து ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கூறப்படும் உரையை படித்ததில் அவர் தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, பெண்ணுரிமை, சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்துள்ளார். அது போல் அதே உரையல் 65 ஆவது பத்தியில் இருந்த அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களையும் ஆளுநர் ரவி படிக்காமல் தவிர்த்து விட்டார்.

ஆளுநர் உரை
இதற்கு கண்டனம் தெரிவித்து ஆளுநர் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறும் போது ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை. எனவே அந்த உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக அரசு தயாரித்த உரையே அவைக் குறிப்பில் குறிப்பிடப்படும் என தெரிவித்தார். முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறினார்.

பொங்கல் விழா அழைப்பிதழ்
இதையடுத்து ஆளுநர் மாளிகை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழ் வெளியானது. அதில் மத்திய அரசின் இலச்சினை இடம் பெற்றிருந்தது. தமிழ்நாடு என்ற பெயரும், தமிழ் மாதமும் திருவள்ளுவர் மாதமும் தவிர்க்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாட்டு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டிருந்தது. இது பலரது கண்டனத்துக்குள்ளானது. ஆளுநரின் இந்த பொங்கல் விழா நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர்.

பாமக ராமதாஸ் வேதனை
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை... ஆளுனர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு இல்லை... தமிழ் மாதம் இல்லை... தமிழ்நாடு இல்லை.. தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை. இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை! என தெரிவித்துள்ளார்.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்!











Click it and Unblock the Notifications