பொய்.. பித்தலாட்டம்.. ஏமாற்று வேலை.. பழக்க தோஷம் மாறாதல்லவா.. ஸ்டாலின் மீது ராமதாஸ் தாக்கு!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலையில் இறங்கியிருக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்.
அதில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும். சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
திட்டங்கள்
பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயத்தில் பழைய முறை நடைமுறைப்படுத்தப்படும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ திட்டங்களை கைவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக வழங்கியது.
விக்கிரவாண்டி
எனினும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாததால் இந்த தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்ற திமுகவுக்கு முடியாமல் போனது. இந்த நிலையில் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரம்
மக்களவைத் தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
|
பித்தலாட்டம்
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் மீண்டும் பொய், மீண்டும் பித்தலாட்டம், மீண்டும் ஏமாற்று வேலை. பழக்கதோஷம் மாறாதல்லவா! என கேள்வி எழுப்பியுள்ளார்.